மன்னார் முசலிப் பிரதேசத்தில் குளங்கள் எதுவும் சீரமைக்கப்படவில்லை நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அசமந்தப் போக்கினால் மழைநீர் சேமிக்கப்படாமல் கடலில் கலக்கின்றது என முசலிப் பிரதேச சபை தவிசாளர் சுபிகான் குற்றஞ்சாட்டியுள்ளார் .
மன்னார் மாவட்டம் கடந்த பத்து மாதங்களுக்கு மேலாக அதிகூடிய வறட்சியினால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் மன்னார் மாவட்டத்தில் மிக முக்கியமான பெரிய குளங்கள் வற்றி மிக ஆழம் கொண்ட கிணறுகளில் கூட தண்ணீர் இல்லாமல் போகவே மக்கள் தண்ணீருக்காக பெரும் சிரமங்களை எதிர் நோக்கியிருந்தார்கள்.
,ஆனால் மன்னார் மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரங்களாக நல்ல மழை வீழ்ச்சி ஏற்பட்டு ,வயல்கள் சிறு குளங்கள் மட்டுமல்லாது பெரிய குளங்களிலும் தண்ணீர் நிறைந்து காணப்படுவதால் ,சில விவசாயிகள் வயல்களை விவசாயத் திற்கு தயார் படுத்துவதைக் காணக் கூடியதாக உள்ளது.
ஆனால் முசலிப் பிரதேசத்தில் உள்ள குளங்கள் எதுவும் சீரமைக்கப்படாமை யால், மழை நீர் முற்று முழுதாகக் கடலில் கலந்துவிடுகிறது .இதனால் பெரும்போக நெற்செய்கை முசலிப்பிரதேசத்தில் கேள்விக்குறியாக உள்ளது .இதற்கான பொறுப்பினை முசலி நீர்பாசனத் திணைக்களமே ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்த தவிசாளர் இது பற்றி மேலும் தெரிவிக்கையில்:
முசலிப் பிரதேச மக்கள் கடந்த 2009 ஆம் ஆண்டில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்கள். இவர்கள் பிரதானமாக விவசாயம் கடல்த்தொழில் செய்தாலும் ,இவர்களது பிரதான தொழில் விவசாயம் மட்டுமே.
உயிலங்குளத்தில் இயங்கும் நீர்பாசனத் திணைக்களத்தின் உப அலுவலகம், முசலி வேப்பங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த அலுவலகம் அமைக்கப்பட்டாலும் முசலி நீர்பாசனத் திணைக்கள உப அலுவலகத்தின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை.</p><p>காரணம் மன்னார் மாவட்டத்தில் உள்ள மூன்று பெரிய குளங்களில் ஒன்று விளாயடிக்குளம் இது முசலி ப் பிரதேசத்தில் உள்ளது.
இதற்கும் கீழ் ஒன்பது குளங்கள் உள்ளது. இவை நீர்பாசனத் திணைக்களத் துக்கு உரித்தானது. இந்த ஒன்பது குளம் சீரமைப்பிற்கு பெருந்தொகையான பணம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் சீரமைப்புப் பணிகள் நல்ல முறையில் நடைபெறாமல், சிறு தொகைகளுக்குள் மேம்போக்காக செய்து பாரிய ஊழல் மோசடி நடைபெற்றுள்ளதாக சந்தேகிக்கின்றேன். சீரமைப்புப் பணியை நீர்பாசனத் திணைக்களம் செய்வதாக காட்டிக் கொண்டு, முசலிப் பிரதேச நீர்பாசனத் திணைக்கள அதிகாரி தனிப்பட்ட முறையில் அரச வேலைத்திட்டங்களை செய்கிறார். இதன் காரணமாகவே முசலிப் பிரதேசத்தின் குளங்கள் சீரமைக்கப் பட்டாமல், குளங்களில் நீர் தங்குதல் இன்றி வீணாகக் கடலில் கலக்கிறது. இதனால் விவசாயத்தை பல வழிகளில் நம்பி வாழும் மக்கள் எதிர்காலத்தில் என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருக்கின்றார்கள் என முசலிப் பிரதேச சபை தவிசாளர் சுபிகான் தெரிவித்தார்.
இந்த குற்றச்சாட்டு பற்றி முசலி சிலாவத்துறைப் பகுதி நீர்ப்பாசனப் பொறியியலாளர் சுகிதரனிடம் கேட்டபோது: இந்தக் குற்றாச்சாட்டானது கண்டிக்கத் தகக்கது. முசலிப் பிரதேசத்தில் அவசரமாக சீரமைக்கப்பட வேண்டிய குளங்கள் சீரமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. விளாயடிக் குளத்தின் கீழுள்ள ஆறு குளங்களில் கோரமோட்டை குளம் 16 மில்லியன் ரூபா செலவில் பணி நடந்து கொண்டிருக்கிறது பிச்சவானிபகுளம் வேலை நிறைவு பெற்றுவிட்டது.
பெரிய குளக்கட்டு வேலைகளின் தரம் கருதி தனியாருக்கு கொடுக்காமல், எமது திணைக்களமே அவற்றை செய்கிறது. நீர்பாசனத் திணைக்களத்திற்கு உரிய சிறிய குளங்கள், வீதிகளை அவ்வூர் விவசாய அமைப்புகளே செய்கிறது. முசலித் தவிசாளரின் குற்றச்சாட்டு அர்த்தமற்றது. என்னுடன் தனிப்பட்ட கோபத்தினால் பழி தீர்ப்பதற்காக அவர் இவ்வாறு குற்றம் சாட்டுவதாக முசலி சிலாவத்துறை நீர்ப்பாசனப் பொறியியலாளர் தெரிவித்தார் .