காணியை விடுவிப்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலேயே விமானப்படையும் உள்ளது!

262 0

பொது மக்களுக்கு சொந்தமான காணியை விடுவிப்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலேயே விமானப்படையும் இருப்பதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தெரிவித்துள்ளார். 

தலதா மாளிகையில் இடம்பெற்ற இராணுவ வீரர்கள் ஞாபகார்த்த மத வழிபாட்டு நிகழ்வின் போதே எயார் மார்ஷல் கபில ஜயம்பதி இவ்வாறு குறிப்பிடார்.

பொது மக்களுக்கு சொந்தமான காணியை விமானப்படை கைப்பற்றவில்லை என்றும் அவர் கூறினார்.

படைப் பிரிவினர் வசமுள்ள மக்களின் காணிகளை டிசெம்பர் மாதம் முடிவடைவதற்கு முன்னர் விடுவிக்குமாறு ஜனாதிபதி அறிவித்தல் விடுத்துள்ளார். அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலேயே விமானப்படையும் உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Leave a comment