நாலகவின் மடிக் கணினியிலிருந்து சந்தேகத்திற்கிடமான சான்றுகள்

231 0

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தபா­ய ராஜ­பக்ஷ ஆகி­யோரை கொலை செய்ய சதி செய்ததாக எழுந்துள்ள குற்­றச்­சாட்டு விவ­கா­ரத்தில் பணி  இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டுள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்­வாவின் மடிக் கணி­னியில் இருந்து சந்­தே­கத்­துக்கு இட­மான சில சான்­றுகள் சி.ஐ.டி.க்கு கிடைத்­துள்­ளன.

பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பிரிவின் பிரதிப் பொலிச் மா அதி­ப­ருக்கு சொந்­த­மான அலு­வ­லக மடிக் கணியில்  ரசிகா சஞ்­ஜீ­வனீ எனும் பெயரில் பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போலி முகப் புத்­தக கணக்கை மைய­பப்­டுத்தி இந்த சந்­தேகம் எழுந்­துள்ள நிலையில், அந்த போலி கணக்­கூ­டாக அவர் யாருடன் உரை­யா­டினார், என்ன உரை­யா­டினார் என்­பதை வெளிப்­ப­டுத்த மடிக் கணி­னியை அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ள­ருக்கு அனுப்ப சி.ஐ.டி. நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்­னவின் அனு­ம­தியைப் பெற்­றுக்­கொண்­டது.

ஜனா­தி­பதி மைதி­ரி­பால சிறி­சேன, முன்னாள் பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ ஆகி­யோரை கொலை செய்ய சதி செய்யும்  வித­மாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக சில்வா தொலை­பே­சியில் கலந்­து­ரை­யா­டி­ய­தாக கூறப்­படும் விடயம் தொடர்பில், சி.ஐ.டி.  முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களில் சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைது செய்­யப்­பட்­டுள்ள இந்­தி­யரை நேற்று நீதி­மன்றில் ஆஜர்ச் செய்து, குறித்த சதி விவ­காரம் தொடர்பில் முன்­னெ­டுக்கும் விசா­ர­ணை­களின் தற்­போ­தைய நிலை­மையை விளக்கும் வித­மாக 60 பக்க சிறப்பு அறிக்­கையை சமர்ப்­பித்தே  இந்த அனு­ம­தியை சி.ஐ.டி. பெற்­றது.

அத்­துடன் ஏற்­க­னவே அரச இர­சா­யன பகுப்­பாய்­வுக்கு அனுப்­பட்ட இந்த விவ­கா­ரத்தின் முறைப்­பாட்­டாளர் பொலிஸ் உள­வாளி நாமல் குமா­ரவின் தொலை­பே­சியில் பல தக­வல்கள் அழிக்­கப்­பட்­டுள்­ளதால், அதனை அந்த தொலை­பேசி உற்­பத்தி செய்­யப்­பட்ட ஹொங்கொங் நாட்­டுக்கே அனுப்பி அந்த தக­வல்­களை மீளப் பெறவும் அனு­மதி பெற்­றுக்­கொள்­ளப்பட்­டது.

மேலும் அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ள­ருக்கு குரல் சோத­னைக்­காக அனுப்­பப்­பட்ட 124 குரல் பதி­வு­களில் 123 இல் உள்ள குரல்கள் நாலக சில்வா மற்றும் நாமல் குமா­ர­வி­னு­டை­யது என்­பதை அரச இர­சா­யன பகுப்­ப­யவு திணைக்­களம் உறுதி செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment