விசாரணை முடிந்து வெளியேறினார் நாலக

263 0

ஒன்பது மணி நேர வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கொலைச் சதி  விவகாரம் குறித்து  பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ள  பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின்  முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா இன்று மூன்றாவது நாளாக விசாரணைக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரானார்ர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தாபய ராஜபக்ஷ  ஆகியோரை கொலை செய்ய சதி செய்யும் விதமாக தொலைபேசியில் கலந்துரையாடப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில்  பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலகவிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அதற்கிணங்க கடந்த வாரத்தின் வியாழனன்று 9 மணி நேரமும், வெள்ளியன்று 10 மணி நேரமுமாக 19 மணி நேரம் இது குறித்து விசாரிக்கப்பட்டுள்ள நிலையில்,  நாலக டி சில்வாவை இன்று காலை 9.15 இற்கு சி.ஐ.டி.யில் ஆஜராகுமாறு கறுவாத்தோட்ட பொலிஸார் ஊடாக அவருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜரான நாலக டி சில்வாவிடம் 9 மணி நேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சற்று முன்னர் அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவிலிருந்து வெளியேறியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment