கங்கை நதி தூய்மையாகும்: நிதின் கட்கரி

326 0

 ”துய்மை கங்கா திட்டத்தில், 227பணிகளை, அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு பின், கங்கை துாய்மையாகி விடும்,” என, மத்திய அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, நிதின் கட்கரி தெரிவித்தார்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, கங்கை நதியை துாய்மைப்படுத்தும் திட்டத்தில், அதிக ஆர்வம் செலுத்தி வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர், நிதின் கட்கரி, கங்கை துாய்மை, நீர்வளம் ஆகிய துறைகளையும் கூடுதலாக கவனித்து வருகிறார்.

இந்நிலையில், டில்லியில் நிருபர்களிடம் கட்கரி கூறியதாவது: கங்கை நதியை துாய்மையாக்க சில நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம். இதற்காக, 22 ஆயிரத்து, 374 கோடி ரூபாயில், 227 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கங்கையில் கழிவு நீர் கலப்பதை தடுப்பது, கரைகளை பலப்படுத்துதல், நதி நீர் தடைபடாமல் செல்வதுடன் துாய்மையாக இருப்பது உட்பட, பல பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தப் பணிகள், அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் முடிந்து விடும். அதன்பின், கங்கை, துாய்மையாக காட்சியளிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment