மவ்பிம பத்திரிகையின் உரிமையாளர் டிலான் அலஸ் சிங்கப்பூரில் கைது!

458 0

89580_45454-500x300மவ்பிம பத்திரிகையின் உரிமையாளர் டிரான் அலஸ் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி யு.எல். 308 இலக்க விமானத்தில் சிங்கப்பூர் பயணமாகியிருந்தார். இவரை சிங்கப்பூர் விமானநிலையத்தில் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்து பல மணித்தியாலங்களாக கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

நிதி மோசடி மற்றும் பணச்சலவைக் குற்றச்சாட்டுக்களுக்குள்ளாகியிருக்கும் நபர்களை சிங்கப்பூர் தனது நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிப்பதில்லை.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட டிரான் அலஸ், மறுநாள் 21ஆம் திகதி அவர் பயணம் செய்த யு.எல்.308 விமானத்திலேயே சிறீலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

விடுதலைப் புலிகளுடனான பணப் பரிமாற்றம், ராடா நிறுவன ஊழல் மோசடி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்குகளுக்கு முகம்கொடுத்து வருகின்றார். வைத்தியப் பரிசோதனை என்ற கோரிக்கையின் அடிப்படையில் நீதிமன்ற அனுமதியைப் பெற்றே சிங்கப்பூர் பயணமானார்.

Leave a comment