நீர்கொழும்பு பகுதியில் வைத்து 100 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
பாலாவி பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி எடுத்த வரப்பட்டுக் கொண்டிருந்த போது குறித்த கேரள தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கேரள கஞ்சா 8 மில்லியன் ரூபா பெறுமதியுடையவை என தெரிவிக்கப்படுகின்றது.