தோட்டத் தொழிலாளர்களுக்கான  1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தலவாக்கலை நகரில் தனிமனித போராட்டம் ஒன்று இடம்பெற்றது. 

 

இதன்போது தேயிலை கூடைகளில் சுலோகங்களை எழுதிய வண்ணம் தனி நபர் ஒருவர் தலவாக்கலை நகர் சுற்று வட்டத்திலிருந்து பிரதான வீதியூடாக பயணித்து தனது எதிர்ப்பை வெளிபடுத்தியுள்ளார்.

 

இந்நிலையில் குறித்த நபர் தனது முகத்தை கறுப்பு துணியால் மூடி கட்டிக்கொண்டு எதிர்ப்பு வாசகங்கள் எழுதிய கொழுந்து கூடைகளை இழுத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது.