மின்னல் தாக்கி ஒருவர் மரணம்

275 0

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடியோடையில் வயல் வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இன்றைய தினம் தமது வயலில் விதைப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளை மின்னல் தாக்கியதன் காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்கத்துக்குள்ளாள சத்துருக்கொண்டான் பிரதேசத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி மனோகரன் (60) என்பவரே இவ்வாறு உயிரிழநதவராவார்.

மின்னல் தாக்கிய நிலையில் செங்கலடி வைத்தியசாலைக்கு அழைத்துச் சொல்லும் வழியிலேயே மரணம் ஏற்பட்டிருக்கிறது.

ஓய்வு பெற்ற வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

Leave a comment