மொஹமட் நிஷாம்தீன் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை

194 0

கைதுசெய்யப்பட்ட 25 வயதுடைய இலங்கை மாணவர் மொஹமட் நிஷாம்தீன் தீவிரவாத குற்றச் சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

சிட்னி பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் இவர், ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் சார்பாக சிட்னி நகரை குண்டு வைத்துத் தகர்த்தல் மற்றும் அவுஸ்திரேலியாவின் முன்னணி ஆளுமைகளைப் படுகொலை செய்தல் ஆகிய குற்றச்செயல்களுக்கான திட்டங்களை தீட்டிய குற்றச்சாட்டின் கடந்த ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

பின்னர் அவர் அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, குறித்த குற்றச் சாட்டிலிருந்து அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment