தேசிய கால்நடை அபிவிருத்திச் சபை தலைவரின் விளக்கமறியல் நீடிப்பு

212 0

இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் கே.எம். முத்துவிநாயம் உள்ளிட்ட இருவரும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இருவரையும் எதிர்வரும் 23ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, சம்பவம் தொடர்பில் மேலும் விசாரணை இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Leave a comment