ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

230 0

பலபிட்டிய-மீகெட்டுவத்த பிரதேசத்தில் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக அம்பலாங்கொட பொலிஸ் தெரிவித்துள்ளனர்.

நேற்று (17) இரவு 9.00 மணியளவில் மீகெட்டுவத்த வயோதிப இல்லத்திற்கு அருகே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், காயமடைந்தவர் பலபிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அம்பலங்கொட பொலிஸின் தகவலின்படி இந்த தாக்குதல் தனிப்பட்ட குரோதத்தின் விளைவாக ஏற்பட்டுள்ளது.

பலபிட்டிய, சிரிசேன மாவத்தையைச் சேர்ந்த 29 வயதான தமித் குமார டி சொய்சா என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

சடலம் பலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று (18) நடத்தப்படவுள்ளது.

சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவரை கைது செய்வதற்காக அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment