தகவல் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான தொழில் முயற்சியாளர்களை உருவாக்கி புதிய தொழில்வாய்ப்புக்கான சந்தர்ப்பம் மற்றும் வருமான வழியை  ஏற்படுத்தி வடக்கு பிரதேசத்தில் நிலையான அபிவிருத்தியை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கு அமைவாக ஏற்றுமதி சந்தையில் ஈடுபடக்கூடிய வகையில் தொழில் சேவை திட்டங்களுக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கு மிகவும் இலகுவாகவும் பயனுள்ள வகையிலும் தமது அலுவலகங்களை பயனுள்ள வகையில் அமைத்துக்கொள்ளக்கூடிய வகையில் தேவையான சேவைகளை வழங்குவதற்காக புதிய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் மத்திய நிலையம் ஒன்று  இலங்கையிலும் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாண பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளது.

நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.