கூட்டு எதிர்க்கட்சியின் அனைத்து பிரச்சினைகளும் வெளியாகியுள்ளது- ரஞ்சன் ராமநாயக்க

206 0

கூட்டு எதிர்க்கட்சியில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தற்போது வெளியாகியுள்ளதாக பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கதிர்காமம் வனப்பகுதியில் பங்களா ஒன்று இருப்பதாக தொடுத்த முறைப்பாடு ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்க நேற்று (16) குற்றத்தடுப்பு பிரிவிற்கு பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வருகை தந்திருந்தார்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வாசுதேவ நாணயக்கார மற்றும் குமார வெல்கம ஆகியோர் கருத்து தெரிவிப்பது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் திட்டத்தின் அடிப்படையில் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment