மேல்மாகாண சபை கொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்

204 0

கொழும்பு மாநகர சபைக்கு மேல்மாகாண சபையினால் முத்திரை கட்டணம், தண்டப்பணம் உள்ளிட்டவைகளுக்காக 3000 மில்லியன் ரூபா பணம் வழங்க வேண்டியிருப்பதாக மாநகர ஆணையாளர் வீ.கே.ஏ.அநுர தெரிவித்துள்ளார்.

அண்மையில் கடன் முத்திரை கட்டணமாக 500 மில்லியன் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை வரிக்கட்டணங்கள், கடைத்தொகுதிகளுக்கான கூலிகள் உள்ளிட்டவைகளுக்கு மில்லியன் அளவில் கடன் வழங்கப்படவிருப்பதாகவும் மாநகர ஆணையாளர் வீ.கே.ஏ.அநுர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment