பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட தெபுவன பொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் பணியில்

168 0

அண்மையில் தெபுவன நகரத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டதாக தற்காலிக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் மீண்டும் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி நேற்று மாலை முதல் அவர் பணியில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

இதேவேளை குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கியிருந்தமை கூறத்தக்கது.

தெபுவன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எதிராக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தெபுவன நகரத்தில் எதிர்ப்பில் ஈடுபட்டதனால் அவர் கைது செய்யப்பட்டு தற்காலிகமாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

Leave a comment