ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த இருவருக்கு மரண தண்டனை

210 0

ஹெரோயின் போதைப் பொருள் 122.68 கிராம் உடமையில் வைத்திருந்த குற்றவாளிகள் இரண்டு பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி விகும் களுஆரச்சி இன்று இந்த தீர்ப்பை வழங்கியதாக செய்தியாளர் கூறினார்.

2010 டிசம்பர் மாதம் 09ம் திகதி மிரிஹானை பிரதேசத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த இரண்டு பிரதிவாதிகளும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி சட்டமா அதிபரால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக இடம்பெற்று வந்த வழக்கு விசாரணைகளின் படி இன்றைய தினம் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட இருவருக்கும் நீதிபதி மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

Leave a comment