இறுதி தீர்வு காணும்வரை கறுப்பு ஆடை! -வேலு யோகராஜ்

213 0

கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இறுதித் தீர்வு காணும் வரை, கறுப்பு நிற ஆடைகளை அணிந்து கடமைகளை முன்னெடுக்குமாறு, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளதாக, நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார். 

அலுவலக கடமை நேரத்திலும் கள நடவடிக்கைகளின் போதும், கறுப்பு நிற ஆடை அணிந்து செல்லுமாறும், ஆறுமுகன் தொண்டமான் எம்.பி பணித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்த விடயத்தில், முதலாளிமார் சம்மேளனத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், இவ்விவகாரத்தில் நியாயமான தீர்வு கிடைக்கும் வரை, இதனைக் கடைபிடிக்குமாறும் ஆறுமுகன் தொண்டமான் எம்.பி அறிவுறுத்தியுள்ளதாக, நுவரெலியா பிரதேச சபையின் தவிசாளர் வேலு யோகராஜ் மேலும் தெரிவித்தார்.

Leave a comment