இந்தியப் பெண் உட்பட அவரது இரு பிள்ளைகள் கைது!

258 0

ஹொரணை – வகஹாவத்தை பிரதேசத்தில் காலாவதியான வீசாவுடன் இலங்கையில் தங்கியிருந்த இந்திய பெண் உட்பட அவரது பிள்ளைகள் இருவரும் கைது செய்யப்ட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய நேற்று புதன்கிழமை பிற்பகல் 6.10 மணியளவில் குறித்த இந்திய பிரஜை உட்பட இரு பிள்ளைகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான 28 வயதுடைய பெண் உட்பட அவருடைய 8 வயது மற்றும் 2 வயதுடைய பிள்ளைகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவிக்கின்றது.

அத்துடன்இ சந்தேக நபர்கள் நேற்று ஹெரணை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment