11 இலங்கையர்களுக்கு பிணை

288 0

bailசட்டவிரோதமாக அவுஸ்திரேலிய செல்ல முயற்சித்ததாக தெரிவித்து தமிழ் நாட்டில் கைது செய்யப்பட்ட 11 இலங்கையர்களுக்கு சென்னை மேல் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

எனினும் அவர்கள் இந்த மாதம் 26ஆம் திகதி வரையில் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கி இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகியப் பகுதிகளைச் சேர்ந்த குறித்த 11 பேரும் நாகர்கோவில் பகுதியில் வைத்து கடந்த ஜுன் மாதம் 26ஆம் திகதி தமிழக கியு பிரிவு காவற்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

எனினும் தாங்கள் சட்ட ரீதியான விசாவுடன் சுற்றுலாவந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டதாக தெரிவித்து அவர்கள் சென்னை மேல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.