அரசாங்கத்தின் கடன்களை நிதியமைச்சர் பகிரங்கப்படுத்த வேண்டும் – சி.பி. ரத்னாயக்க

285 0

அரசாங்கம் இதுவரையில் பெற்றுள்ள அரச முறை கடன்கள் மற்றும்  மீள் செலுத்தியுள்ள கடன் மற்றும்  வட்டி தொடர்பிலான விடயங்களை நிதியமைச்சர்  மங்கள சமரவீர  பகிரங்கப்படுத்த வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி. பி. ரத்னாயக்க தெரிவித்தார்.

 

கடந்த அரசாங்கம் பாரிய முறையற்ற கடன்களை  பெற்றுள்ளது என்று     குற்றஞ்சாட்டும் தேசிய  அரசாங்கம் குறுகிய காலத்தில் கடந்த அரசாங்கத்தை விட  அதிகமாக கடன் பெற்றுள்ளது எனவும்   தெரிவித்தார்.

பொதுஜன பெரமுன கட்சி  அலுவலகத்தில்  இன்று இடம்பெற்ற   ஊடகவியலாளர்  சந்திப்பில்  கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Leave a comment