இரத்தினபுரியில் மழை தொடர்கிறது ; இயல்புநிலை பாதிப்பு ; மண்சரிவு அபாய எச்சரிக்கை !

250 0

இரத்தினபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து காற்றுடன் பெய்துவரும் அடை மழையால் தோட்டத்தொழிலாளர்கள் உட்பட அனைத்து மக்களின் இயல்புநிலை பாதிப்படைந்து வருவதுடன் மண்சரிவு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

 

மேற்படி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் 6 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள பல பிரதேசங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கட்டிட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

மேற்படி மாவட்டத்தில் பலாங்கொடை, இம்புல்பே, அயகம, கலவான, இரத்தினபுரி, எலபாத்த ஆகிய ஆறு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கே இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது.

மேற்படி மண்சரிவு அபாய பிரதேசங்களில் வாழும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment