பொதுஜன பெரமுனவின் ஒழுக்காற்று எச்சரிக்கை

17112 0

பொதுஜன பெரமுனவின் உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருப்பதாக அக்கட்சியின் அரசியல் சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமாகிய பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட கட்சி பொதுஜன பெரமுன மட்டுமே ஆகும். கட்சியின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் உள்ளுராட்சி சபைக்குள் அவர்களின் செயற்பாடுகள் என்பன தொடர்பில் கட்சி அவதானம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

கட்சியின் உள்ளக ஒழுக்காற்று நடவடிக்கைகளைப் பேணுவதற்கு கட்சியின் யாப்பியல் ரீதியாகவே ஒழுக்காற்றுக் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

கட்சியின் எந்தவொரு உறுப்பினரும் ஒழுக்காற்றுப் பிரச்சினைகளுக்கு உட்படுவார்களாயின் எச்சந்தர்ப்பத்திலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்சி தயங்காது. இந்த உறுப்பினர்களின் சமூக வாழ்க்கை தொடர்பிலும் கட்சி அவதானத்துடன் இருப்பதாகவும் அக்கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள விசேட அறிக்கையில் பசில் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளார்.

Leave a comment