தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவருக்கு விளக்கமறியல்

316 0

இலஞ்சம் பெற்றமை தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவரை எதிர்வரும் 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான மஜிஸ்ட்ரேட்  நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.

கால்நடை அபிவிருத்தி சபையின் தலைவர் முத்து வினாயகம் 6 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக நேற்று கைது செய்யப்பட்டார்.

தேசிய கால்நடை அபிவிருத்தி சபைக்குச் சொந்தமான மெல்சிரிபுர, பண்ணையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றை 2 வருட குத்தகைக்கு வழங்குவதற்கு அதன் தலைவர் 12 லட்சம் ரூபா லஞ்சம் கோரியுள்ளார். இதில் 6 லட்சம் ரூபாவை பெற்றுக் கொள்ளும் போதே சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச, ஊழல் விசாரணை அதிகாரிகளினால் இவர் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment