மதுபானசாலையை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்

206 0

பருத்தித்துறை சிவன் ஆலயத்திற்கு முன்பாகவும், வேலாயுதம் மாவித்தியாலயம், பள்ளிவாசல் பிரதான வீதிக்கு அருகாமையிலும் உள்ள மதுபானசாலையை அகற்றக்கோரி கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது குறித்த மதுபானசாலைக்கு எதிராக பிரதேச செயலாளரிடம் 18 அமைப்புக்கள் கையெழுத்திட்ட கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

மேலும் இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பருத்தித்துறை வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடியும், முச்சக்கர வண்டி சாரதிகளும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

அதேவேளை நூற்றுக்கணக்கான பெண்கள்  பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ். பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலய மாணவர்கள் ஆசிரியர்கள் தமது பாடசாலை முன்பாக பதாதைகளை ஏந்தி தமது எதிர்ப்பினையும் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment