கண்டியில் பயணிகள் பஸ் மீது குண்டுத் தாக்குதல் ,4 தமிழர்களுக்கு 10 வருட சிறை

203 0

கடந்த 2008ஆம் ஆண்டு கண்டி- பொல்கொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ் வண்டி ஒன்றின் மீது குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு, 3 பேர் பலியான சம்பவம் தொடர்பில், சதித்திட்டம் தீட்டியமை, நிதியுதவி வழங்கினார்கள் என்று குற்றஞ்சமத்தப்பட்டுள்ள 4 குற்றவாளிகளுக்குக் கொழும்பு மேல்நீதிமன்றம் 10 வருடச் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளதுடன், இதனை 5 வருடங்களில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, நீதிமன்றில் ஆஜராகிய குற்றவாளிகள் குறித்த குற்றச்சாட்டுக்களை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

இதற்கமைய, சந்தேகநபர்களுக்கு 10 வருடச் சிறைத்தண்டனை தீர்ப்பளித்த நீதிபதி அதை 5 வருடங்களில் அனுபவிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன்,குற்றவாளிகளிடம் 25,000 ரூபாய் அபராதப் பணமும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment