மூங்கில் வெட்ட சென்றவரின் உடற் பாகங்கள் மீட்பு

248 0

மூங்கில் வெட்டுவதற்காக காட்டிற்குள் சென்று காணாமல் போயிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவரின் உடற் பாகங்கள் குளத்திற்கு அருகில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த உடற் பாகங்கள் மனம்பிட்டிய முஸ்லிம் பள்ளிக்கு பின்னால் உள்ள குளத்திற்கு செல்லும் பாதையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபரின் தலைபகுதி மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரின் சடலத்தை முதலைகளில் உட்கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

நாமல் பொகுண, அரணகல்வில பகுதியை சேர்ந்த அதிரகாமர் தம்பி மூர்த்தி எனும் 57 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் கடந்த 23 ஆம் திகதி மூங்கில் வெட்டுவதற்காக வீட்டில் இருந்து சென்று காணாமல் போயிருந்ததாக நேற்று (25) குடும்பத்தினர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment