வடக்கில் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சியை உருவாக்க சிலர் முயற்சி-பந்துலால் பண்டாரிகொட

273 0

வடக்கில் மீண்டும் ஆயுதக் கிளர்ச்சியை உருவாக்க சிலர் முயற்சி செய்து வருவதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.

நேற்று (25) காலி பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தெற்கில் உருவாகியுள்ள பாதாள உலக குழுவினரை போன்று வடக்கிலும் சில குழுக்கள் உருவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸ் மா அதிபர் மீது சிலர் அச்சம் கொண்டு இருப்பதாகவும் அதனால் அவருக்கு எதிராக அவர்கள் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் மா அதிபர் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடு செய்ய வேண்டும் எனின் பொலிஸ் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வழங்க முடியும் எனவும் அவ்ர தெரிவித்துள்ளார்.

Leave a comment