நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிகளில் உள்ளது – ஜே வி பி

462 0

anura-1-Copyநாட்டின் பொருளாதாரம் ஐந்துவிதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்துள்ளதான ஜே வி பி யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மஹிந்த அரசாங்கத்தினால் ஐந்தாண்டு திட்டம் முன்வைக்கப்பட்டது.
பத்துவருடங்கள் கடந்தும் அதன் ஒரு திட்டம் கூட வெற்றியளிக்கவில்லை.
ஐக்கிய தேசிய கட்சியினர் ஆட்சிக்கு வரும்போது ஐந்தாண்டு திட்டத்தை முன்வைத்தனர்.
எனினும் கடந்த ஒன்றரை வருடங்களில் அதன் திட்டங்களும் வெற்றியளிக்கவில்லை என்பதை மக்களால் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டங்களில் இருந்து அறிய முடிந்துள்ளதாக அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ஐந்துவித தி;ட்டங்கள் அனைத்தும் நாட்டை ஐந்துவிதமான நெருக்கடிகளுக்குள் தள்ளியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

Leave a comment