காஸ்மீர் தாக்குதல்-பாகிஸ்தான்மீது போர் தொடர வேண்டும்-இந்துமக்கள் கட்சி கோரிக்கை (காணொளி)

412 0

rameswaram-motchatheebam-prabhakaran-voice-20-09-2016pho

காஷ்மீரில் பலியான இந்திய வீரர்களுக்கு இராமேஸ்வரம் கோயிலில் மோட்சதீபம் ஏற்றி பாகிஸ்தான்மீது போர் தொடர வேண்டும் என இந்துமக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காஷ்மீரில் உள்ள இராணுவமுகாம் மீது பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான இராணுவவீரர்களின் ஆத்மா சாந்தியடைய இராமேஸ்வரத்தில் மோட்சதீபம் ஏற்றபட்டது
ஜம்மு காஷ்மீரில் உரிநகர் பகுதியில் அமைந்துள்ள இராணுவப்படைபிரிவு முகாமில் கடந்த 18ஆம் திகதி அதிகாலையில் துப்பாக்கியோடு ஊடுருவிய பயங்கரவாதிகள் திடீர்தாக்குதல் நடத்தினார்கள்.
அப்போது அக்கூடாரம் தீபிடித்தது. அதில் தூங்கிக்கொன்டிருந்த 17 வீரர்கள் பலியானார்கள். 30 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து சக வீரர்கள் நடாத்திய துப்பாக்கி சன்டையில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்
பலியான இந்திய இராணுவவீரர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி இன்று இராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி திருக்கோயின் நுழைவுப்பகுதியில் அமைந்துள்ள மோட்ச பீடத்தில் இந்துமக்கள் கட்சி சார்பில் 17 மோட்ச தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தி பிரார்த்தனையில ஈடுபட்டனர்.

மேலும் இந்தியாவின் இறையாண்மையை பாதுகாக்க பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் எனவும், உலக வரைபடத்தில் தீவிரவாதிகளின் புகலிடமாக திகழும் பாகிஸ்தானை நீக்கி தனிமைப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.