மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் பலி

2881 0

புத்தளம் – ஆணமடுவ மிதிவண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில், சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் மரணமடைந்துள்ளதாக ஆணமடுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் நள்ளிரவில், புத்தளம் – ஆணமடுவ பாதையில் கஜுவத்த பிரதேசத்தில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

மிதிவண்டியில் பயணம் செய்தவர் பாதையைக் கடப்பதற்காக வலப்பக்கம் திரும்புகையில்,

பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியுள்ளது.

காயமடைந்த இருவரும். ஆணமடுவ வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, மிதிவண்டியில் பயணித்தவர் புத்தளம் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார்.

எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் ஆணமடுவ கொட்டுகச்சிய பிரதேசத்தை சேர்ந்த 64 வயதான முதியான்சலாகே திசானாயக ஆவார்.

சம்பவத்தில் காயமடைந்த மாம்புரி – தளுவ பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான அசங்க ப்ரசாத்  ஆணமடுவ வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment