மதுபானங்களுடன் ஒருவர் கைது

640 0

சட்டவிரோதமான முறையில் வௌிநாட்டு மதுபான வகைகளை உடமையில் வைத்திருந்த இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் கூறியுள்ளது.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 11 லீட்டர் வௌிநாட்டு மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

34 வயதுடைய தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 9000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment