மஹேந்திரன் தொடர்பில், கணக்காய்வாளர் அறிக்கை கோப் குழுவிடம் சமர்ப்பிப்பு

5073 0

Arjuna-Mahendran-640x400சர்ச்சைக்குரிய திறைசேரி முறிகள் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் தமது அறிக்கையை எதிர்வரும் 29ஆம் திகதியன்று கோப் குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதனையடுத்தே மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரன் பதவியில் நீடிக்கமுடியுமா? முடியாதா? என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி தலைமையிலான கோப் குழு தீர்மானிக்கவுள்ளது.
இதேவேளை கோப் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் வரை தாம் பதவிநீடிப்பை கோரப்போவதில்லை என்று அர்ஜூன் மஹேந்திரனும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment