2018இல் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் – பாதுகாப்பு செயலாளர்

923 0

dig3141052_23032016_kaa_cmyஎதிர்வரும் 2018ஆம் ஆண்டளவில் வடக்கில் உள்ள பொது மக்களின் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் நேற்று இடம்பெற்ற காணிகளை விடுவிப்பதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இராணுவத்தின் தேவைக்கு அவசியமற்ற ஏனைய அனைத்துக் காணிகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த காணிகள் மாதாந்த அடிப்படையிலோ அல்லது நாளாந்த அடிப்படையிலோ விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, நாம் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டின் நாளனுக்காக செயற்பட வேண்டும் என தெரிவித்தார்.

Leave a comment