ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழப்பு

206 0

கூட்டு எதிரணியினால் ஏற்பாடு செய்த ஜனபலய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மாரடைப்பு காரணமாக இவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதேவேளை, நேற்றைய ஆர்ப்பாட்டத்துக்கு வந்த மேலும் 81 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment