இ.போ. ச ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு

186 0

இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களின் சம்பளம் அடுத்த மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபையின் ருஹூணு அலுவலகத்தின் கீழ் இயங்கும் 11 டிப்போக்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தம் தொடர்பாக இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இது தொடர்பான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து வேலைநிறுத்தம் முடிவிற்கு வந்துள்ளதாகவும், மீண்டும் தொழிலுக்கு திரும்புமாறும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் ஊழியர்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a comment