மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து ஒருவர் பலி

375 0

மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருந்து விழுந்ததில் காயமடைந்திருந்த நபர் ஒருவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளததாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (02) இரவு மதுரங்குளிய, தெடுவாவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மதுரங்குளிய, தெடுவாவ பகுதியை சேர்ந்த மொஹமட் அஸ்வர் எனும் 64 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளை செலுத்திக் கொண்டிருக்கும் போது குறித்த நபர் திடீரென விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கீழே விழுந்து காயமடைந்த நபரை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

முந்தலம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment