ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது-தலதா அத்துகோரல

229 0

அனைத்து பிரஜைகளுக்கும் சுதந்திரமாக உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியும் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிறைச்சாலையில் கைதிகள் சிலர் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது இவ்வாறான சுதந்திரம் இருக்கவில்லை எனவும் ஆர்ப்பாட்டங்களின் போது கைதிகள் கொலை செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 5 ஆம் திகதி கொழும்பில் ஏற்பாடு செய்துள்ள அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்ட பேரணிக்கு எவ்வித எதிர்ப்பையும் காட்டுதில்லை எனவும் அதற்காக பூரண சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a comment