வவுனியாவில் போலி நாணயத்துடன் நபர் ஒருவர் கைது

313 0

வவுனியாவில் போலி நாணயத்தாளை வியாபர நிலையத்திற்கு கொடுத்தவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை நேற்று இரவு வர்த்தக நிலையம் ஒன்றில் பொருட்கள் கொள்வனவு செய்துவிட்டு 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வியாபார நிலையத்திற்கு கொடுத்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று இரவு வேப்பங்குளம், பட்டாணிக்சூர் பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்றில் மோட்டார் சைக்கிலுக்கான உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்துவிட்டு 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வர்த்தக நிலையத்திற்கு வழங்கியுள்ளார்.

இதையடுத்து குறித்த 5ஆயிரம் ரூபாவில்  வர்த்தக நிலைய உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது இதையடுத்து வர்த்தக நிலைய உரிமாயாளர் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

மேலும் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் 5ஆயிரம் ரூபா போலி நாணயத்தாளை வைத்திருந்த 24வயதுடைய நபரைக் கைது செய்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment