அரசாங்கத்திலிருந்து விலகி, எதிரணியில் அமர்ந்துள்ள, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 16 பேரின் பாதுகாப்பு விலக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சரவை இணைப் பேச்சாளர். அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
ஊடக அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற, வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

