முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் கையில் ஆயுதங்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்- முஸம்மில்

267 0

ஆயுதங்கள் இந்நாட்டின் முஸ்லிம் அமைச்சர்களின் கையில் இருப்பதாக அண்மையில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் முஸம்மில் தெரிவித்தார்.

கொழும்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இந்த தகவல்கள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த தகவல்களை வெளியிட்டவர்களிடம் விசாரணைகளை நடாத்தி மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

அரசாங்கத்தின் பாதுகாப்பில் இருக்கும் இந்த அரசியல்வாதிகள் தொடர்பில் இதுவரையில் அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இவர்களிடம் ஆயுதம் இருப்பது, தேசிய பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஆகும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment