நேபாள் செல்கிறார் ஜனாதிபதி

337 0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு நேபாளிற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஜனாதிபதி நாளைய தினம் இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார் என ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

நேபாளில் இடம்பெறவுள்ள 4 ஆவது பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்பதற்காகவே ஜனாதிபதி அந்நாட்டுக்கு செல்லவுள்ளார்.

இதன்போது வங்காள விரிகுடா வலயத்திற்குட்பட்ட நாடுகளுக்கிடையில் தொழிநுட்பம் மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள் – காத்மண்ட் நகரில் இந்த மாநாடு நாளைமறுதினம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment