இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க இந்தியா இணக்கம்

310 0

இலங்கையில் தமது முதலீடுகளை அதிகரிப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனை தெரிவித்துள்ளார்.

வியட்நாமில் இந்து சமுத்திர மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்விற்கும் அவருக்கும் இடையிலான சந்திப்பு நேற்று நடைபெற்றிருந்தது.

இதன்போது அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

வீடமைப்பு, துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்திகள் விடயத்தில் இந்தியா, இலங்கையில் முதலீடுகளை விரிவாக மேற்கொள்ளும் என்றும் சுஸ்மா சுவராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment