தேசிய ஊடக மத்திய நிலையத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ்

307 0

1805479380untitled-1தேசிய ஊடகமத்திய நிலையத்தின் தலைவராக முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாகீர் மாக்கர் இன்று பதவியேற்றார்.

பிரதமர் அலுவலகத்தின் கீழ் விசும்பாயவில் இந்த மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த மத்திய நிலையத்தின் பணிப்பாளராக அரச தகவல் திணைக்கள பணிப்பாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய கடமையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேசிய ஊடக மத்திய நிலையம் ஊடாக ஆய்வு மற்றும் வடிவமைத்தல், ஊடகத்தின் நடவடிக்கைகளை ஆய்வு செய்தல், ஊடக நிறுவனங்களுக்கு தகவல்களை பெற்றக்கொடுத்தல், பெறுதல், தகவல் அறியும் சட்டமூலம் தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கினைத்தல் என்பன இந்த மத்திய நிலையத்தின் கடமைகள் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது