பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மிருகங்கள் இறப்பு!

226 0

வவுனியா, பச்சன்குளம் பகுதியில் உள்ள மிருகங்கள் வளர்க்கும் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மிருகங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (23) மாலை இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த தீ விபத்தினால் சுமார் 8 ஏக்கர் பண்ணை தீயினால் அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக வவுனியா காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Leave a comment