கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் கைது

202 0

தலவாக்கலை பகுதியில் 13,850 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் ஐந்து பேர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.ஹட்டன் கலால் திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றி வளைப்பினை மேற்கொண்ட அதிகாரிகள் குறித்த நபர்களால் இரகசியமான முறையில் மறைத்து வைத்திருந்த போது குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் தலவாக்கலை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

குறித்த நபர்கள் இன்று ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக கலால் திணைக்கள அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

Leave a comment