போதைப்பொருள் கடத்தல்காரர்களிற்கு மகிந்தஅரசாங்கம் புகலிடமளித்தது!

367 0

முன்னைய அரசாங்கத்தின் பல முக்கிய உறுப்பினர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தனர் என சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தள்ளார்.

கடந்த மூன்று வருடகால ஆட்சியின் போது இலங்கையை ஜனநாயகம் நிலவும் சுதந்திர நாடாக நல்லாட்சி அரசாங்கம் மாற்றியுள்ளது என சட்டமொழுங்கு அமைச்சர் ரஞ்சித்மத்தும பண்டார தெரிவித்துள்ளார்

நல்லாட்சி அரசாங்கம் நாட்டில் குற்றச்செயல்களின் அளவை குறைத்துள்ளது என தெரிவித்துள்ள அமைச்சர் கடந்த மூன்று வருட காலப்பகுதியில் பாலியல்வன்முறை மற்றும் கொலைகள் குறைந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

ராஜபக்ச காலத்தில் 600 ஆக காணப்பட்ட கொலைகளை 400ஆக குறைத்துள்ளோம்,சிறுவர் துஸ்பிரயோகம் கொள்ளை போன்ற சம்பங்களும் குறைவடைந்துள்ளன என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை போதைப்பொருள் ஓழிப்பில் அரசாங்கம் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கம் குற்றவாளிகளை பாதுகாக்காது எனவும் தெரிவித்துள்ள அவர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களிற்கு எதிர்காலத்தில் கடும் தண்டனைகளை வழங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களிற்கு புகலிடம் அளித்தது, அவர்களிற்கான பாதுகாப்பை அது வழங்கியது எனவும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் பல முக்கிய உறுப்பினர்கள் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் நெருக்கமான தொடர்புகளை கொண்டிருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொலிஸார் போதைப்பொருட்களை கைப்பற்றியவேளைகளில் அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தலையிட்டு அவற்றை விடுவித்தனர் என தெரிவித்துள்ள சட்டமொழுங்கு அமைச்சர் தற்போது சட்டமொழுங்கு அமுலாக்கல் பிரிவினர் சுதந்திரமாக செயற்பட முடிகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment