யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவரை சீ.ஐ.டி! விசாரணைக்கு அழைக்கிறது

288 0

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றின் அலுவலக செய்தியாளர் நடராஜா குகராஜாவை விசாரணைக்கு வருமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.இவரை எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பிலுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியாக கூறப்படும் சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை விடுவித்து உதவினார்கள் என்ற குற்றச்சாட்டில் வட மாகாண முன்னாள் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் ஆகியோருக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இதில் மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் இருந்து பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

உப பொலிஸ் பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகி உள்ள நிலையில் அவருக்கு எதிராக நீதிமன்றால் பகிரங்கப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

Leave a comment