உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்கள் 21-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் அதற்குரிய விண்ணப்பங்களை கொடுக்கலாம் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க.வின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகிறவர்கள் 21-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் அதற்குரிய விண்ணப்பங்களை கொடுக்கலாம். 30-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
சென்னை மாநகராட்சி, மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான விண்ணப்ப படிவங்கள் தலைமை கழகத்தில் வழங்கப்படும்.
பிற மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட கழக அலுவலகங்களில் கீழ்க்கண்ட அட்டவணைப்படி மாவட்டங்களுக்கு உரிய பொறுப்பாளர்களிடம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுக்கவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வேலூர் மத்தியம், கிழக்கு, மேற்கு- இளங்கோவன்
சென்னை வடக்கு, மத்தியம், தெற்கு, மேற்கு-எல்.கே.சுதீஷ் , மீஞ்சூர் சேகர்
திருவண்ணாமலை வடக்கு, தெற்கு- வெங்கடேசன்.
திருச்சி மாநகர், தெற்கு- செல்வ.அன்புராஜ்
தூத்துக்குடி வடக்கு, தெற்கு-முருகநாதன், செல்வ ராஜ்
தேனி-சிங்கை.சந்துரு
தஞ்சாவூர் தெற்கு- சுப மங்கள டில்லிபாபு, ஜான்சி ராணி
திருவாரூர்-சுபாரவி.
போட்டியிட விரும்பும் பதவி கட்டணத் தொகை விவரம் வருமாறு:-
மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்- ரூ. 3 ஆயிரம்
மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்-ரூ. 3 ஆயிரம்
ஒன்றிய குழு உறுப்பினர்-ரூ. 1000.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.