போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது

171 0

போலி நாணயத்தாள்களை வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் கலேன்பிந்துனுவெவ ரத்மல்வெலிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கலேன்பிந்துனுவெவ பொலிஸ் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்த போலி 1000 ரூபா தாள்கள் 70 பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

23 மற்றும் 20 வயதுடைய ரத்மல்வெட்டிய மற்றும் குருணாகல் பிரதேசங்களைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், கலேன்பிந்துனுவெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment